Tuesday, December 24, 2019

16 செல்வங்கள் – 11) மாறாத வார்த்தை


11) மாறாத வார்த்தை

உள்ளம் மொழி மெய்
என்ற
மூன்றாலும்
தவறின்றி வாழ்பவன்

மனித வடிவில்
மகாத்மா

உள்ளத்தில் இருப்பது
உண்மை
வாய்வழி வருவது
வாய்மை
மெய்யால் செயற்படுவது
மெய்ம்மை

இதில்

ஆராய்ந்து
அறியப்பட்ட
உண்மை யாதெனில்

வாய்மையே
ஓர்
உயர்ந்த அறநெறி

வாய்மை
என்பது
சொல் வழுவாமை

உள்ளத்தில்
உள்ளதை
உள்ளபடி உரைப்பது

எந்தவொரு
உயிருக்கும்
தீதின்றி அமைவது

நன்மை
உண்டாக்குமானால்
பொய்யான
சொல்கூட
மெய்யென்று ஏற்பது

நீரில் குளிப்பதால்
உடல் தூய்மை
உண்மை பேசுவதால்
மனம் தூய்மை

மனச்சாட்சிக்கு
எதிராக
பொய் சொல்பவன்
மனச்சாட்சியாலே
தண்டிக்கப்படுவான்

மனதாலும்
பொய்யை
நினைக்காதவன்
மக்கள் மனதில்
நீங்கா
இடம் பிடிப்பான்

உள்ளம் அறிய
உண்மை பேசுபவன்
தானமும் தவமும்
செய்பவரிலும்
உயர்ந்த
நிலை பெறுவான்

உள்ளத் தூய்மைக்கு
வேண்டிய உயர்ந்த
அறச்செல்வம்

வாய்மை



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai






No comments:

Post a Comment