Tuesday, December 24, 2019

16 செல்வங்கள் – 3) கபடு வாராத நட்பு


3) கபடு வாராத நட்பு

வாழ்வில்
அமைகின்ற
மனித
உறவுகள்
நான்கு

பிறப்பால்
அமைவது
சொந்தம்

திருமணத்தால்
அமைவது
பந்தம்

இருப்பிடத்தால்
அமைவது
சுற்றம்

பழக்கத்தால்
அமைவது
நட்பு

இந்த

உறவுகளில்
உன்னதமானது
நட்பு.

நட்பே

துன்பத்தைக்
குறைத்து
இன்பத்தைப்
பெருக்கும்

ஒரு மனிதனை
வாழ்வில்
உயர்த்துவதும்
அதுவே
தாழ்த்துவதும்
அதுவே

அன்பை
மட்டுமல்ல
துன்பத்தையும்
பகிர்வது

பாசம்
சாதிக்காததை
நட்பு
சாதிக்கும்

உலகமே
விலகினாலும்

நம்முடன்
இருக்கும்

நமக்காக
தன்னுயிரையும்
கொடுக்கும்

புரிதலையும்
அனுசரித்தலையும்
அடிப்படையாகக்
கொண்ட

ஈடு
இணையற்ற
உண்மைச் செல்வம்

வஞ்சமில்லா நட்பு.


🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai






No comments:

Post a Comment