Friday, July 18, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - கவிதை

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
கவிதை என்பது
 
அழகில் வாழும் ஓர் உண்மை
(ராபர்ட் கில்ஃபிலன்)
 
உண்மையில் உணர்வையும் கருத்தையும்
பகிர்ந்துகொள்ளும் ஒரு வழி
(கரோலின் கென்னடி)
 
உணர்ச்சிகளுக்கு
உருவம் கொடுக்கும் அறிவு வடிவம்
(வில்சன்)
 
சிறந்த சொற்கள் சிறப்பாகக் கோர்க்கப்படுவது
(ஸேம்யல் காலெரிட்ஜ்)
 
மனிதன் இயற்கையுடன் இணையும் இசைவு
(தாமஸ் கார்லைல்)
 
அழகு கண்கொண்டு
வாழ்வை விமர்சனம் செய்வது
(திருமதி. ஜார்ஜ் பியர்ஸ்)
 
சொல்லாலும் பொருளாலும்
மூல உண்மைகளை வெளிப்படுத்துவது
(கே.சி. சாப்மன்)
 
மனிதன் தனது வியப்பை ஆராயும் மொழி
(கிறிஸ்டோபர் ஃப்ரை)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment