Sunday, July 27, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - புரட்சி

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
புரட்சி என்பது
 
பழுத்தவுடன் விழும் ஆப்பிள் அல்ல;
அதை விழ வைக்க வேண்டும்.
(சேகுவேரா)
 
அடக்குமுறை எனும் விதையிலிருந்து
தோன்றுவது
(உட்ரோ வில்சன்)
 
கொடுங்கோன்மையின் மீதான
கோபத்தால் உருவாவது
(வில்லியம் காட்வின்)
 
ஒடுக்கப்பட்டவர்களின் திருவிழா
(ஜெர்மைன் கிரீர்)
 
சுரண்டுபவர்களுக்கு எதிராக
சுரண்டப்படுபவர்களின் சர்வாதிகாரம்
(பிடல் காஸ்ட்ரோ)
 
பூகம்பம் போலக் கணிக்க முடியாதது
(ரெபேக்கா சோல்னிட்)
 
ஒரு நாவலைப் போலவே
கண்டுபிடிப்பதற்குக் கடினமான முடிவுப் பகுதி.
(அலெக்ஸிஸ் டி டக்யுவில்லே)
 
எதிர்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும்
இடையிலான மரணப் போராட்டம்
(பிடல் காஸ்ட்ரோ)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment