Friday, August 1, 2025

பழமொழி நானூறு - அவையறிதல்

 

பழமொழி நானூறு
 
அவையறிதல்
 
(அவையின் செவ்வி அறிதல்)
 
தோற்பன கொண்டு புகாஅர் அவை
 
தோற்பதற்குக் காரணமானவைகளைக் கொண்டு
சபையின்கண் புகார்
 
(வாதக்கிரமம்)
 
இன்னாது இருவர் உடனாடல் நாய்
 
இருவர் தனித்தனியேயன்றி ஏககாலத்தில்
ஒரு நாயைக்கொண்டு வேட்டையாடுதல் பொல்லாதது
 
(வார்த்தையில் விடைவழு)
 
முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு
 
முழங்காலில் அடிப்பட்டவனுக்கு
மூக்கில் கட்டுக் கட்டுவது போன்றது
 
(கற்றார் அவையில் கல்லார் சொல்லாடுதல்)
 
பரிசு அழிந்தாரோடு தேவரும் மாற்றல் இலர்
 
பண்பழிந்தாரோடு தேவர்களும் ஒரு வார்த்தை சொல்லார்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment