Thursday, August 14, 2025

பழமொழி நானூறு - அமைச்சர்

 

பழமொழி நானூறு
 
அமைச்சர்
 
(அரசன் திறத்துக்கு அவன் சபை அறிகுறி)
 
நீத்தம் மலைப் பெயல் காட்டும் துணை
 
மலையிலே மழை பெய்த அளவை
அறிவிக்கும் அளவாம் வெள்ளம்
 
(அரசன் எப்படி அமைச்சரும் அப்படி)
 
செய்தானை ஒவ்வாத பாவையோ இல்
 
எழுதுமவன் கருத்துக்குப் பொருந்தாத சித்திரம் இல்லை
 
(அமைச்சரைக் கண்ணாகக் கொள்ளாத அரசன்)
 
சுரை யாழ் நரம்பு அறுந்தற்று
 
ஒரு நரம்பையுடைய செங்கோட்டியாழின்
அந்த ஒரு நரம்பும் அறுந்தாற்போலும்
 
(அமைச்சரை ஆராய்ந்து வசப்படுத்தல்)
 
புல்லத்தை புல்லம் புறம் புல்லுமாறு
 
எருதை எருதால்
தன் வசப்படுத்துதல் போன்று
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment