Monday, August 4, 2025

பழமொழி நானூறு - நட்பின் இயல்பு

 

பழமொழி நானூறு
 
நட்பின் இயல்பு
 
(நட்டற்குத் தக்கார் தகார் என்பதில்லை)
 
தீற்றாதோ நாய் நட்டால் நல்ல முயல்
 
நாயானது தன்னோடு நட்பு கொண்டால்
நல்ல முயலினை உண்பியாதோ?
 
(அன்பிலார் நட்பின் பழமைபற்றிப் புதுநட்பை நீக்காமை)
 
முழம் நட்பின் சாண் உட்கு நன்று
 
முழ நீள நட்பைக் காட்டிலும்
சாண் நீள உயர்ந்த நட்பே நன்றாம்
 
(நட்பினர் பழியைத் தூற்றாமை)
 
உரையார் இழித் தக்க காணின் கனா
 
இழிவானவற்றை கனவில் கண்டால் அவற்றைப்
பிறர்க்கு உரையார்
 
(நண்பினரிடம் குற்றங்கண்டு கோபியாமை)
 
யார் உளரோ தம் கன்று சாகக் கறப்பார்
 
தம் கன்றிற்குப் பால்விடாமல் அது சாகும் வகையாகப்
பசுவினைக் கறப்பவர் எவர் உளர்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment