Sunday, August 17, 2025

பழமொழி நானூறு - இல்வாழ்க்கை

 

பழமொழி நானூறு
 
இல்வாழ்க்கை
 
(பிறர் மனையில் தமியராய்ப் புகாமை)
 
நீர் மிகின் இல்லை சிறை
 
நீர் ஒலி செய்து மிகுந்தால்
அதனை அடைத்து வைக்கத் தக்க சிறை இல்லை
 
(நிறை காவாரைச் சிறை காவாமை)
 
நாய் வால் திருந்துதல் என்றுமோ இல்
 
நாயின் வாலை
ஒழுங்காக நின்று திருத்துதல் என்றும் இல்லை
 
(வறியாரிடம் செல்வர் விருந்து செல்ல வேண்டா)
 
குருவி குறங்கு அறுப்பச் சோரும் குடர்
 
குருவியின் தொடையை அறுத்தபொழுதே
அதன் குடல் சோருவது போலும்
 
(ஏனைய ஈந்தும் இன்சொல் ஈயாமை)
 
எருமை எறிந்து ஒருவர் காயக்கு லோபிக்குமாறு
 
தின்ன வேண்டி எருமையைக் கொன்ற ஒருவர்
அதைச் சமைப்பதற்குரிய மசாலாவுக்கு
கஞ்சத்தனம் செய்வது போன்று
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment