Saturday, August 16, 2025

பழமொழி நானூறு - படை வீரர்

 

பழமொழி நானூறு
 
படை வீரர்
 
(பேதை தறுகணன் ஆகான்)
 
அறிவு அச்சம் ஆற்றப் பெரிது
 
அறிவினால் வந்த அச்சம் பேதைக்கு மிகப் பெரிது.
 
(வலிய பகைவர் இல்லாதார் படைவீரரை வேண்டார்)
 
பூசை எலி இல் வழிப் பெறா பால்
 
எலியால் வருந்துதல் இல்லாத வீட்டில்
பூனைக்குப் பால் கிடைக்காது
 
(வலியிலார் தம் படையைப் பொலியச் செய்தல் நன்று)
 
படையின் படைத்தகைமை நன்று
 
படையெடுத்துச் செல்வதைக் காட்டிலும்
தமது படையைப் பொலிவுடையதாகச் செய்து
பாதுகாத்திருப்பது நன்று
 
(மகண் மறுத்து மொழிதல்)
 
வாழைக்காய் உப்பு உறைத்தல் இல்
 
வாழைக்காயில்
உப்பு உறைப்பதில்லாமை போல்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment