Sunday, August 3, 2025

பழமொழி நானூறு - கீழ்மக்கள் செய்கை

 

பழமொழி நானூறு
 
கீழ்மக்கள் செய்கை
 
(கீழ்மக்களை நாவடக்குதல் முடியாமை)
 
வாங்கி வளித் தோட்கு இடுவாரோ இல்
 
காற்றை வாங்கி தோளின்மேல் இடவல்லார் இல்லை
 
(வெள்ளரைக் கள்ளராகக் காட்டுதல்)
 
பிறரைக் கள்ளராச் செய்குறுவார்
 
தமது குற்றத்தை எடுத்துக்காட்டும் வெள்ளரைக்
கள்ளராகச் செய்வார்
 
(நியாய சபையிலன்றி உண்மை உரையாமை)
 
மன்று அஞ்சுவாற்குப் பரிகாரம் யாதொன்றும் இல்
 
கீழோர் தாம் மறையச் செய்த கொடுமையை
நியாய சபையில் உள்ளது உள்ளபடி சொல்லுவர்
 
(கீழ்மக்கள் ஒழுக்கத்தைப் பலரும் அஞ்சுதல்)
 
மன்றத்து மையல் சேர்ந்தற்று
 
மன்றத்திலே நின்றானொருவன் பித்தேறியது போலும்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment