Tuesday, August 19, 2025

பழமொழி நானூறு - உறவினர்

 

பழமொழி நானூறு
 
உறவினர்
 
(உறவினர் பிரியாமல் பொருந்துதல்)
 
துன்னினார் அல்லார் பிறர்
 
ஒரு குடியில் பிறவாத பிறர் சிறந்தவர் அல்லர்
 
(உறவினர் உறைக்கும் உறுதியைக் கேட்டல்)
 
தாய் மிதித்த ஆகா முடம்
 
தாய் மிதித்தன முடம் ஆகாது
 
(உறவினர் செய்வதை உற்றார் செய்க)
 
துன்னூசி போம் வழி போகும் இழை
 
தையல் ஊசி போகின்ற வழியே இழையும் போகும்
 
(நெடுநாள் சேர்ந்துறைதலால் நேரும் துன்பம்)
 
திருவொடும் இன்னாது துச்சு
 
இலக்குமியோடாயினும் நெடுநாள் சேர்ந்துறைதல்
துன்பம் தருவதாம்
 
(சுற்றத்தாரோடு சூதாடல் ஆகாது)
 
காதலோடு ஆடார் கவறு
 
உற்றாரோடு சூதாட்டம் ஆட மாட்டார்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment