Friday, August 15, 2025

பழமொழி நானூறு - பகைத்திறம்

 

பழமொழி நானூறு
 
பகைத்திறம்
 
(பகைவர் ஒட்டாமை)
 
உவர்நிலம் உட்கொதிக்குமாறு
 
உவர்மண் உட்கொதித்து உதிருமாறு போல
 
(பகைவரை வசப்படுத்தல் ஆகாமை)
 
ஒக்கலை வேண்டி அழல்
 
இடுப்பிலே ஏறிப்போக வேண்டி
குழந்தை அழுதலோடொக்கும்
 
(பெரியாரோடு பகை கொள்ளாமை)
 
கூற்றம் புறம் கொம்மை கொட்டினார் இல்
 
யமனுடைய முதுகில் கொம்மை கொட்டிப்
பிழைத்தவர் இல்லை
 
(பெரியாரைச் சார்ந்தாரோடு மாறுகொள்ளாமை)
 
தீநாய் எழுப்புமாம் எண்கு
 
காட்டைச் சார்ந்து வாழும் கரடியை
நாய் சென்று எழுப்புதல் போலும்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment