Wednesday, August 27, 2025

பழமொழி நானூறு - வீட்டு நெறி

 

பழமொழி நானூறு
 
வீட்டு நெறி
 
(தம் மனத்தைத் தம் வயப்படுத்தல்)
 
இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை உடைமை தலை
 
இம்மைக்கும் மறுமைக்கும் தம் மனத்தைத் தம்வயத்தாக்கித்
தம்மை உணர்தலே முக்கியமான காரியம்
 
(மறுமைக்கானவைகளைக் காலத்தாலே செய்க)
 
கொல்லிமேல் கோட்டு வைத்தார்
 
கொல்லி மலையின்மேல் நெற்கூடு கட்டி வைத்தவராவர்
 
(இல்லறம் நடத்திப் பின் துறவறம் மேற்கொள்க)
 
துறவா உடம்பினான் என்ன பயன்?
 
துறவில் செல்லாத உடம்பால் பயன் என்ன உண்டு?
 
(இல்லறமேனும் துறவறமேனும் தழுவாதவர்)
 
இருதலையும் காக் கழித்தார்
 
காவடியின் இரண்டு பக்கத்துப் பாரத்தில் உள்ள பொருளைப்
போக்கிக் காவடி கம்பைக்கொண்டு நின்றவர் போல்வர்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment