Saturday, August 16, 2025

பழமொழி நானூறு - படை வீரர்

 

பழமொழி நானூறு
 
படை வீரர்
 
(பகைவரைத் தாக்கி வெல்பவரே வீரர்)
 
யாப்பினுள் அட்டிய நீர்
 
அழுந்தக் கட்டிய கட்டில் உள்ள நீர் குத்தினபோது
வீறிட்டுப் பாய்வதுபோல்
 
(தன் அரசனுக்குத் தன் உடம்பை உதவல்)
 
உண்ணா இரண்டு ஏறு ஒரு துறையுள் நீர்
 
இரண்டு எருதுகள் ஒரு துறையில் நீர் உண்ணமாட்டா
 
(வீரம் இல்லாதார் சிறப்பு அடையார்)
 
வாங்கும் எருது ஆங்கு எழாமை சாக்காடு எழல்
 
சேற்றில் அழுந்தாமல் இழுக்கக்கூடிய எருது
நெட்டியிழுக்காமல் சாவதுபோலும்
 
(அரசன் நன்கு மதிக்காவிட்டாலும் வீரர் வினை செய்க)
 
ஊர் மேற்றது அமணர்க்கு ஓடு
 
பலர் உறையும் ஊரில்
தவசிகளுக்கு இரந்துண்ணும் ஓட்டால் பயன்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment