Tuesday, August 19, 2025

பழமொழி நானூறு - உறவினர்

 

பழமொழி நானூறு
 
உறவினர்
 
(அநுதாபம் இல்லாதவர் உறவு)
 
உமிக் குற்றுக் கை வருந்துமாறு
 
உமியைக் குற்றுவதால் கை வலித்தல்போலும்
 
(வறுமையை உறவினர் தீராவிடத்துச் செய்யத்தக்கது)
 
எல்லாம் பொய் அட்டூணே வாய்
 
யாவரும் உண்ணும் உணவிற்கு அவசியமானவற்றைச்
செய்வது மெய்; மற்றெல்லாம் பொய்.
 
(சுற்றத்தார் இலக்கணம்)
 
மனை மரம் ஆய மருந்து
 
மனையின்கண் நின்ற மருந்து மரத்தைப் போன்றது
 
(உதவுவோர் உறவினரே)
 
பெய்யுமாம் பெய்யாது எனினும் மழை
 
மழை பருவத்தில் பெய்தது இல்லையாயினும்
பின்னையும் பெய்யும்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment