Saturday, August 2, 2025

பழமொழி நானூறு - சான்றோர் செய்கை

 

பழமொழி நானூறு
 
சான்றோர் செய்கை
 
(பொருள் இன்றெனினும் ஒப்புரவு செய்தல்)
 
ஏற்றுக் கன்று ஏறாய் விடும்
 
நல்ல எருதிற்குப் பிறந்த கன்று பின்னையும் எருதாகிவிடும்
 
(கடன்பட்டும் ஒப்புரவு செய்தல்)
 
கடங்கொண்டும் செய்வார் கடன்
 
வேறொருவரிடம் கடன் வாங்கியாயினும்
தான் செய்யவேண்டுவனவற்றைச் சான்றோர் செய்வர்
 
(நடுவுநிலைமையில் நின்று மெய் பேசுதல்)
 
சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்
 
பெரியோர் பிறருடைய கைப்பொருளை உண்டாராயினும்
(அவர்க்காகப் பொய் சொல்லார்; நடுவுநின்று) மெய் சொல்வர்
 
(குற்றஞ்செய்த நண்பினரைத் திருத்தல்)
 
பூண்ட பறை அறையாராயினார் இல்
 
தாம் பூண்ட பறையை (குற்றமுடையது என்று)
அறையாது இடையே தவிர்த்தார் இல்லை
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment