Tuesday, August 26, 2025

பழமொழி நானூறு - ஈகை

 

பழமொழி நானூறு
 
ஈகை
 
(சிறிய பொருள் கொடுத்துப் பெரிய பேறு பெறுதல்)
 
அயிரை இட்டு வரால் வாங்குபவர்
 
தூண்டிலில் அயிரை எனும் சிறிய மீனை இரையாகக்
கோத்து வரால் எனும் பெரிய மீனைப் பிடிப்பவரோடொப்பர்
 
(வறியவர்க்கு ஈதல்)
 
சுரத்திடைப் பெய்த பெயல்
 
வெயிலால் சுடப்பட்ட வெஞ்சுரத்தின்கண்
அதிகமான மழை பெய்ததனோடொக்கும்
 
(பாத்திரம் அறிந்து கொடுத்தல்)
 
அறுமோ குளம் நெடிது கொண்டது நீர்
 
பெரியதாய் நீர் நிறைந்துள்ள குளம்
நீர் வற்றாதவாறுபோல
 
(குறிப்பறிந்து கொடுத்தல்)
 
கடிஞையில் கல் இடுவார் இல்
 
ஒருவன் பிச்சையேற்கும் பாத்திரத்தில் அவன் இரந்த
பொருளை இடுவதொழிந்து கல்லை இடுவார் இல்லை
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment