Monday, August 11, 2025

பழமொழி நானூறு - பொருள்

 

பழமொழி நானூறு
 
பொருள்
 
(பொருளும் உடையானும்)
 
புதற்குப் புலியும் வலியே;
புலிக்குப் புதலும் வலியாய் விடும்
 
காட்டுக்குப் புலியும் ஆதரவு; புலிக்குக் காடும் ஆதரவு
 
(சிறிதுசிறிதாய்ச் சேர்ந்து பெருஞ்செல்வமாதல்)
 
துளி ஈண்டில் வெள்ளம் தரும்
 
மழைத்துளி மிகுந்தால் கடல்போல் நீரையும் தரும்
 
(சிறிய முதற்பொருளால் பெரிய தனிகனாதல்)
 
அங்காடி மேயும் பழங்கன்று ஏறு ஆதலும் உண்டு
 
கடைத்தெருவில் மேய்ந்து திரியும் முதுகன்றும்
வலிய எருதாதலும் உண்டு
 
(வற்றாத செல்வம்)
 
அறுமோ நரி நக்கிற்று என்று கடல்
 
நரி நக்கினது காரணமாகக் கடல்நீர் குறையுமோ?
 
(பெருஞ்செல்வர் தரித்திரப்பட்டாலும் தாழார்)
 
புலித்தலையை நாய் மோத்தல் இல்
 
புலியின் தலையை நாயானது மோந்துபார்த்தல் இல்லை
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment