Tuesday, August 26, 2025

பழமொழி நானூறு - ஈகை

 

பழமொழி நானூறு
 
ஈகை
 
(பிறர் துன்பம் நீக்க வல்லவர்)
 
வாடியக் கண்ணும்
பெருங்குதிரை யாப்புள் வேறு ஆகிவிடும்
 
சேணமிட்டுப் பழகிய குதிரை இளைத்த காலத்தும்
உப்யோகமான வேலை செய்ய வல்லதாம்
 
(ஏழைகளுக்குக் கொடுத்து ஏழையாவார் இல்லை)
 
கொடுத்து ஏழையாயினார் இல்
 
கொடுத்து ஏழையானவர்கள் ஒருவரும் இல்லை
 
(கொடுக்கக் கொடுக்கச் செல்வம் பெருகும்)
 
இறைத்தோறும் ஊறும் கிணறு
 
இறைக்க இறைக்க மேன்மேல் சுரக்கும் கிணறு
 
(கொடையளவு கொடுப்போருடைய சீர்மையின் அளவே)
 
நீர் வரையவாம் நீர் மலர்
 
நீரின்கண் உள்ள மலர்கள் நீரளவினவாம்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment