Thursday, August 14, 2025

பழமொழி நானூறு - அமைச்சர்

 

பழமொழி நானூறு
 
அமைச்சர்
 
(உயிர்கள் இனிது வாழ்தற்கு அமைச்சர் காரணம்)
 
ஓம்புவார் இல்லெனின் சென்றுபடுமாம் உயிர்
 
காக்கும் பெரியோர் இல்லையாயின்
எல்லா உயிரும் அழிவுறும்
 
(அமைச்சர் சொல்லை அரசன் கொள்ளுதல்)
 
முன் இன்னா மூத்தார் வாய்ச்சொல்
 
பெரியோரது வாய்ச்சொல் முன்னே துன்பமாகத் தோன்றும்
 
(பொய் உரைத்தாயினும் அரசனை நல்வழிப்படுத்தல்)
 
ஒள்ளியகாட்டு ஆளர்க்கு அரிது
 
அரசர்க்கு உண்மையைச் சொல்லித் தெளிவிப்பது அரிதாகும்
 
(அரசன் செய்த தீங்கைக் கல்விமான்கள் பொறுக்க)
 
புலிமுன்னர் புல்வாய்க்கு போக்கு இல்; அதுவே
வலிமுன்னர் வை பாரம் இல்
 
புலியின் முன் மானுக்கும் தப்பிப்போகும் உபாயம் இல்லை;
சூறைக்காற்றின் முன்
வைக்கோல்போர் நிலைத்துநிற்றல் இல்லை
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment