Sunday, August 10, 2025

பழமொழி நானூறு - தெரிந்து செய்தல்

 

பழமொழி நானூறு
 
தெரிந்து செய்தல்
 
(இன்சொல் இடர்ப்படுக்காமை)
 
இன்சொல் இடர்ப்படுப்பது இல்
 
இன்சொல் தன்னைத் துன்பப்படுத்துவது இல்லை
 
 (தம் தம் தன்மையராய் ஒழுகுதல்)
 
தம் நீரர் ஆதல் தலை
 
அவரவர் தமக்கியல்பான தன்மையாய் ஒழுகுதல் சிறந்தது
 
(தம்மை ஐயுற்றவனைப் பொறுத்தல்)
 
நெடுவேல் கெடுத்தான் குடத்துளும் நாடிவிடும்
 
நெடுவேலைத் தொலைத்தவன் குடத்துள்ளேயும்
தேடிட நாடுவான்
 
 (மயில்போலும் கயவர்)
 
மயில்போலும் கள்வர் உடைத்து
 
பாம்பை விழுங்கிக் கண்டார்க்கு அடக்கமாய் தோன்றும்
மயில் போன்ற கள்வரை உடையது உலகம்
 
(பொது)
 
ஓடுக ஊர் ஓடுமாறு
 
ஊர் ஓடுவதற்கொப்ப ஓடுக
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment