Friday, August 1, 2025

பழமொழி நானூறு - ஒழுக்கம்

 

பழமொழி நானூறு
 
ஒழுக்கம்
 
(வடுவல்ல செய்தல்)
 
கல் தேயும் தேயாது சொல்
 
மலை போன்ற கல்லும் தேயும் வடுப்பட்ட சொல் தேயாது
 
(பழியை ஒழுக்கத்தால் பரிகரித்தல்)
 
பிணி ஈடு அழித்துவிடும்
 
நோயின் கடுமை (நம்மையே) அழித்துவிடும்
 
(பழியை அஞ்சிப் பாதுகாவாதார்)
 
பெரும்பழியும் பேணாதார்க்கு இல்
 
பழிக்கு அஞ்சாமல் நடப்பவர்க்கு பெரும் பழியால்
மனம் வருந்துதல் இல்லை
 
(பழிப்பவர்க்குச் சொல்முட்டு இல்லை)
 
தீங்குரைக்கு நாவிற்கு நல்குரவு இல்
 
ஒருவரைத் தீங்குரைக்குமிடத்து
நாவினுக்குச் சொல் தட்டுப்பாடு இல்லை
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment