Wednesday, August 27, 2025

பழமொழி நானூறு - வீட்டு நெறி

 

பழமொழி நானூறு
 
வீட்டு நெறி
 
(எல்லாப் பற்றுக்களும் நீங்கித் தேகாபிமானம் நீங்காமை)
 
யானை போய் வால் போகாவாறு
 
ஒரு வாயிலின் கண்ணே யானைபோக
அதன் வால் போகாமல் நிற்குமாறு போலும்
 
(தீவினை கழிவதற்கு நல்வினை போதாமை)
 
குழிப்புழி ஆற்றா குழிக்கு
 
ஒரு குழியில் தோண்டிய புழுதி
அக்குழியைத் தூர்த்தற்குப் போதாமை போலும்
 
(வினையற்றால் பிறப்பறுதல்)
 
நீர் அற நீர்ச்சார்வு அறும்
 
நின்ற நீர் வற்றவே
அந்நீரைச் சார்வாக வாழ்கின்ற எல்லாம் கெடும்
 
(யாதொரு நெறியிலும் பயிலாமை)
 
பயின்றது வானகம் ஆகிவிடும்
 
பழகிய செய்கை பொல்லாதாயினும்
சுவர்க்கம்போல் இனிதாய்ப் பின் விடுதல் அரிதாகிவிடும்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment