Friday, August 15, 2025

பழமொழி நானூறு - பகைத்திறம்

 

பழமொழி நானூறு
 
பகைத்திறம்
 
(உட்பகை துன்பம் தரும்)
 
அள் இல்லத்து உண்ட தனிசு
 
மனம் நெருங்கினவராய்
வீட்டில் உள்ளாரிடம் கொண்ட கடன்போலும்
 
(வெளிப்பகை தீயது அன்று)
 
மைம்மைப்பின் நன்று குருடு
 
தெரிவதும் தெரியாததுமான கண்ணின்
தன்மையைக் காட்டிலும் குருட்டுத்தன்மையே நன்று
 
(வென்ற பகைவரை வெகுளல்)
 
அரிந்த அரிகால் நீர்ப்படுக்குமாறு
 
நெற்கதிரை அரிந்துவிட்ட தாளை
உழுது நீரிலே அழுகப் புதைக்கும் தன்மைபோலாம்
 
(வலியாரோடு பகைகொள்ளல் பயனின்று)
 
வெண்பாட்டம் வெள்ளம் தரும்
 
சிறிதுசிறிதாக முறைமுறையே பெய்யும் மழையும்
வெள்ளம் தரும்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment