Friday, August 1, 2025

பழமொழி நானூறு - ஒழுக்கம்

 

பழமொழி நானூறு
 
ஒழுக்கம்
 
(குடிப்பிறந்தோர் ஒழுக்கம்)
 
நெய் தலை பால் உக்குவிடல்
 
நெய்யினில் பால் சிந்திவிடும் தன்மையைப் போன்றது
 
(பிறருரைக்கும் நல்லுரையை இகழாமை)
 
நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு
 
நாய் கொண்ட உடும்பினைப் பார்ப்பாரும் தின்பர்
 
(தத்தம் இயல்பின்படி ஒழுகுதல்)
 
நின் நடை நின்னின்று அறிகிற்பார் இல்
 
உனது இயல்பாகிய ஒழுக்கங்களை
உன்னிடத்தில் நின்றும் அறியக்கூடியவர் இல்லை
 
(குற்றம் படாமல் ஒழுகுதல்)
 
ஓர்த்தது இசைக்கும் பறை
 
தாம் கருதிய அனுகரணத்தைப் பறை ஒலிக்கும்
 
(தம் குற்றம் நீக்கல்)
 
வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்து விடல்
 
வெள்ளாடு தன் வாதம் தீர்க்கமாட்டாது; வேற்றுயிரின்
வாத நோயைத் தீர்ப்பது போன்றது
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment