Sunday, August 17, 2025

பழமொழி நானூறு - இல்வாழ்க்கை

 

பழமொழி நானூறு
 
இல்வாழ்க்கை
 
(பொது)
 
வித்தின்றிச் சம்பிரதம் இல்
 
வித்தின்றி விளையும் விளைவு இல்லை
 
(பெற்ற அளவால் உவக்க)
 
பெரிது அகழின் பாம்பு காண்பாரும் உடைத்து
 
மிகவும் அகழ்ந்தால்
பாம்பு காண்பாரையும் உலகம் உடைத்து
 
(புறத்தால் பொலிவுறல்)
 
உடுத்தாரை உண்டி வினவுவார் இல்
 
உடுத்த உடையால் பொலிந்தாரை
உண்டிரோ என்று கேட்பவர் இல்லை
 
(நன் மனைவியர் உடையார்)
 
நாளும் கடலுள் துலாம் பண்ணினார்
 
நாள்தோறும் இறைத்துக்கொள்வதற்குக்
கடலினிடத்தில் ஏற்றமிட்டாரோடொப்பர்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment