Friday, August 15, 2025

பழமொழி நானூறு - பகைத்திறம்

 

பழமொழி நானூறு
 
பகைத்திறம்
 
(வலியாரோடு பொருதல் குற்றம்)
 
சாவாதான் முன்கை வளையும் தொடும்
 
சாவாதவன் வலிபெற்ற காலத்தில் பகைவரை வென்று
கடகம் அணிதலும் கூடும்
 
(வலிய பகைவருக்குக் கோபம் உண்டாக்காமை)
 
நன்றொடு வந்ததொன்று அன்று
 
தனக்கு மிகவும் நன்மையோடு சேர்ந்ததொன்று அன்று
 
(வலியாரை வெகுள்வித்து உயிரிழத்தல்)
 
பலிப் புறத்து உண்பார் உணா
 
பலியிடும் கல்லின் புறத்திட்ட உணவினை
உண்பவராவர்
 
(பழம் பகைவரை நள்ளாமை)
 
பழம் பகை நட்பு ஆதல் இல்லை
 
பழம் பகைவர் நட்பாதல் இல்லை
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment