Friday, August 1, 2025

பழமொழி நானூறு - அறிவுடைமை

 

பழமொழி நானூறு
 
அறிவுடைமை
 
(அறிவின் மாண்பு)
 
அணியெல்லாம் ஆடையின் பின்
 
ஆபரணங்கள் எல்லாம் உடுக்கும் ஆடைக்குப் பின்னே
விரும்பப்படுவன
 
(அறிவினர் மாண்பு)
 
மதியம்போல் பன்மீனும்
காய்கலாவாகும் நிலா
 
சந்திரனைப் போல் பல நட்சத்திரங்கள் திரண்டாலும்
நிலவை எரிக்கமாட்டா
 
(இயற்கை அறிவின் சிறப்பு)
 
கற்றறிவு போகா கடை
 
நூல்களைக் கற்றலால் உண்டான அறிவு
முற்றிலும் போகாது
 
(அறிவுடையாரிடம் அறிவுடையார் சேர்தல்)
 
யானையால் யானை யாத்தற்று
 
தங்கள் யானைகளால் காட்டு யானைகளைப்
பிடிப்பது போன்றது
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment